93 : 1
وَٱلضُّحَىٰ
இரவின் மீது சத்தியமாக, அது மூடும்போது!
★
93 : 2
وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ
இரவின் மீது சத்தியமாக! அது இருள் சூழ்ந்து நிசப்தமாகும்போது,
★
93 : 3
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
(நபியே!) உம் இறைவன் உம்மை விட்டுவிடவில்லை. இன்னும், அவன் (உம்மை) வெறுக்கவில்லை.
★
93 : 4
وَلَلْـَٔاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ
இந்த உலக வாழ்க்கையை விட மறுமை வாழ்க்கைதான் உமக்கு மிகச் சிறந்தது.
★
93 : 5
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ
திட்டமாக, உம் இறைவன் (தன் அருளை) உமக்குக் கொடுப்பான். ஆக, நீர் திருப்தியடைவீர்.
★
93 : 6
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَـَٔاوَىٰ
உம்மை அனாதையாக அவன் காணவில்லையா? ஆக, (உம்மை) அவன் ஆதரித்தான் (-உமக்கு அடைக்கலம் கொடுத்தான்).
★
93 : 7
وَوَجَدَكَ ضَآلًّا فَهَدَىٰ
இன்னும், அவன் உம்மை வழி அறியாதவராகக் கண்டான். ஆக, அவன் (உம்மை) நேர்வழி செலுத்தினான்.
★
93 : 8
وَوَجَدَكَ عَآئِلًا فَأَغْنَىٰ
இன்னும், அவன் உம்மை வறியவராகக் கண்டான். ஆக, அவன் (உம்மை) செல்வந்தராக்கினான்.
★
93 : 9
فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ
ஆக, அனாதைக்கு அநீதி செய்யாதீர்!
★
93 : 10
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ
ஆக, யாசகரைக் கடிந்து கொள்ளாதீர்!
★
93 : 11
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
ஆக, உம் இறைவனின் அருளை (பிறமக்களுக்கு) அறிவிப்பீராக!
★